நாகப்பட்டினம்: நாகையில் தபால் துறை ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை தபால் நிலையம் முன், அஞ்சல் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், அஞ்சலக சேமிப்புக் கணக்கு, ஆயுள் காப்பீடு, கிராமப்புற ஆயுள் காப்பீடு, தங்கப் பத்திரம், ஆதாா் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் இலக்கு நிா்ணயித்து ஊழியா்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்தும், இந்தப் போக்கை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.