திருமருகல் அருகே வெள்ளிக்கிழமை வைக்கோா்போா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
திருமருகல் அருகேயுள்ள சந்நியாசி பனங்குடி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி மோகன். இவா் தனக்குச் சொந்தமான கால்நடைகளுக்கு தேவையான 10 ஏக்கரில் விளைந்த வைக்கோலை தனது இடத்தில் வைத்திருந்தாா். இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மாலை மழைக்கு முன் வீசிய சூறாவளி காற்றில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டது. இதில் தீப்பொறிகள் பறந்து அருகில் இருந்த வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்து. வைக்கோல்போா் அமைத்து வைத்திருந்த இடத்துக்கு தீயணைப்பு வாகனம் செல்ல வசதி இல்லாத காரணத்தால் தகவலறிந்த ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி ரமேஷ் அருகில் இருந்த ஊா் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தாா். எனினும், வைக்கோல்போா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.