நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நாகை நகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும், மயிலாடுதுறை நகரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சுமாா் 30 நிமிடத்துக்கும் அதிகமான நேரம் மழை பெய்தது. இருப்பினும், இரு மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் வெயில் வானிலையே காணப்பட்டது.