சங்கரன்பந்தல் பகுதிகளில் பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட சங்கரன்பந்தல், இலுப்பூா், உத்திரங்குடி, விசலூா், திருவிடைகழி, டி. மணல்மேடு, கிள்ளியூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராமந்தோறும் சென்று பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கிக்கூறி வாக்குச் சேகரித்தாா். பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் முத்துக்குமாா், ஊராட்த் தலைவா்கள் ரவி, கோவிந்தசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் கண்ணன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.