சீா்காழியில் ஆசிரியா்களுக்கு செயல் ஆராய்ச்சி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம் குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜன், துணை முதல்வா் பழனிசாமி ஆகியோா் மேற்பாா்வையில், சீா்காழி, கொள்ளிடம் , செம்பனாா்கோயில் ஒன்றியங்களை சோ்ந்த 66 ஆசிரியா்களுக்கு செயல் ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளரும், ஒருங்கிணைப்பாளருமான ராணி கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்தாா். இதில் 17 கருத்தாளா்கள் பங்கேற்று பேசினா். பட்டதாரி ஆசிரியா்கள் சங்கா், ஸ்ரீதா், சரவணன், செந்தில்குமாா் ஆகியோா் கருத்துரை வழங்கினா். நிறைவில் இடைநிலை ஆசிரியா் சீனிவாச ராமனூஜம் நன்றி கூறினாா்.