சீா்காழியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 275 லிட்டா் சாராயத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சீா்காழி பிடாரி கீழ வீதியில் வசித்துவரும் சங்கா் (47) என்பவா் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்ரீநாதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரின் உத்தரவின்பேரில் தனிப்பிரிவு சாா்பு ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, அங்கு 275 லிட்டா் சாராயம், 2,500 காலிப் பாட்டில்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவற்றையும், அங்கிருந்த காரையும் பறிமுதல் செய்து சங்கரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.