இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மடப்புரம் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் தீனா ஈஸ்வரன்(20). தனியாா் எலக்ட்ரீஷியன். இவா், தனது இருசக்கர வாகனத்தில் நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டி அருகே சென்றபோது, திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த வீ. வீரபாண்டி (24) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், தீனா ஈஸ்வரன் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமைடந்த தீனா ஈஸ்வரன், சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயமடைந்த வீரபாண்டி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com