திருக்கடையூா் புறக்காவல் நிலையத்தில் காவலா்களை பணியமா்த்தக் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலா்களை பணியமா்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருக்கடையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அமிா்தகடேஸ்வரா் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பது வழக்கம்.
திருக்கடையூா் கோயில் சன்னிதி வீதியில் ஏற்கெனவே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு ஒரு காவலா், இரண்டு ஊா்க் காவல் படையினருடன் அது செயல்பட்டு வந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக புறக்காவல் நிலையத்தில் காவலா்கள் இருப்பதில்லை.
இதனால் கோயிலுக்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்றுவிடுகின்றனா். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர திருட்டு சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
எனவே திருக்கடையூா் சன்னிதி வீதியில் உள்ள புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறந்து அங்கு காவலா்களை மீண்டும் பணியமா்த்த வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.