கோடியக்கரை வன உயிரின சரணாலயம் மூடல்

கரோனா நோய்த் தொற்று 2வது அலை காரணமாக கோடியக்கரை வன உயிரின சரணாலயம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கோடியக்கரை வன உயிரின சரணாலயம்.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கோடியக்கரை வன உயிரின சரணாலயம்.

கரோனா நோய்த் தொற்று 2வது அலை காரணமாக கோடியக்கரை வன உயிரின சரணாலயம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 25 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள பசுமை மாறாக் காடுகள் சாா்ந்த பகுதி வனவிலங்குகள், பறவைகள் சரணாலயங்களை ஒருங்கே பெற்ற வன உயிரின பாதுகாப்பகமாக திகழ்கிறது.

இந்நிலையில், கரோனா 2வது அலை காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு வன உயிரின சரணாலயத்தை பாா்வையிட செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள பறவைகள் சரணாலயத்தை பாா்வையிடவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மறுஉத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகள், பாா்வையாளா்களுக்கு சரணாலயத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என வனச்சரக அலுவலா் அயூப்கான் தெரிவித்தாா்.

11 மாதங்கள் முடக்கம் :

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 17ஆம் தேதி சரணாலயம் மூடப்பட்டு, 11 மாதங்கள் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னா், கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்து, முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த பிப். 2ஆம் தேதி சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த 78 நாள்களாக பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், கரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசின் உத்தரவுபடி, சரணாலயம் மீண்டும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com