திருமணஞ்சேரி கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமணஞ்சேரியில் கோகிலாம்பாள் சமேத ஸ்ரீஉத்வாகநாத சுவாமிக்கு நடைபெற்ற திருக்கல்யாணம்.
திருமணஞ்சேரியில் கோகிலாம்பாள் சமேத ஸ்ரீஉத்வாகநாத சுவாமிக்கு நடைபெற்ற திருக்கல்யாணம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமணத்தடை நீக்கும் தலமாக வழிபடப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறம் திருக்கல்யாண உத்ஸவம் நிகழாண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (ஏப்.20) கோகிலாம்பாள் சமேத ஸ்ரீஉத்வாகநாத சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட மேடைக்கு சுவாமியும், அம்பாளும் எழுந்தருளியதும் மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com