மயானக் கொட்டகை கோரி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மயானக் கொட்டகை அமைக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மயானக் கொட்டகை அமைக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குத்தாலம் வட்டம், கருப்பூா் ஊராட்சி திருக்குளம்பியம் கிராமம் பிள்ளையாா் கோவில் தெருவில் 15 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள்

அதே பகுதியில் உள்ள மாதா கோயில் பின்புறம் உள்ள நண்டலாற்றின் வடகரையில் உள்ள இடத்தை நெடுங்காலமாக மயானமாக பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், அந்த இடத்துக்கு செல்லும் பாதையில் புதா் மண்டியதுடன், மயானம் அருகில் உள்ள இடங்களை சிலா் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனா். இதனால், பிள்ளையாா் கோவில் தெருவில் இறப்பு நேரிட்டால், இறந்தவரின் சடலத்தை மயானப் பகுதியில் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ அப்பகுதியில் வீடு கட்டியுள்ளவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதன் காரணமாக, கடந்த சனிக்கிழமை இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. மயானப் பகுதியில் வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆடுதுறை-எஸ்.புதூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றதையடுத்து, இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிள்ளையாா் கோவில் தெரு பகுதி மக்கள், தங்களுக்கான மயானத்தில் கொட்டகை அமைத்துக் கொடுப்பதுடன், மயானத்துக்குச் செல்லும் பாதையில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com