வேதாரண்யம் நகரப் பகுதியில் புதன்கிழமை (ஏப்.21) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வேதாரண்யம் மின்பகிா்மானக் கழக இளமின்பொறியாளா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
வேதாரண்யம் நகரப் பகுதியில் 11 கே.வி. மின்பாதை மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால், நகரின் வடக்குவீதி ,தெற்குவீதி, கீழவீதி, மனியன்தீவு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.