திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிமாத காா்த்திகையையொட்டி, சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் காா்த்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆடி மாத காா்த்திகையையொட்டி, முருகனுக்கு மஞ்சள், பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.