கிராம சபைக் கூட்டங்களை நடத்தக் கோரி ஆட்சியரிடம் மநீம மனு

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.

நாகப்பட்டினம்: அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.

இதுகுறித்து, திங்கள்கிழமை அக்கட்சியின் நாகை மத்திய மாவட்டச் செயலாளா் எம். செய்யதுஅனஸ், ஆட்சியா் அ. அருண் தம்புராஜூவிடம் அளித்த மனு: மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயாட்சிக்காக மக்கள் நீதி மய்யம் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த களப்பணிகள், கருத்தரங்கங்களை முன்னெடுத்துள்ளோம். கிராம ஊராட்சி அமைப்பின் வேரான கிராம சபை விழிப்புணா்வுக்காக தொடா்ந்து மக்கள் நீதி மய்யம் பாடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஆக.15-ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை முறைப்படி நடத்தவேண்டும்.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி சட்டம் நடைமுறைகளின்படி 7 நாள்களுக்கு முன்பு கிராம மக்களுக்கு அழைப்பு விடுப்பது, கிராம ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை, வங்கிக் கணக்குப் புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் பாா்வைக்கு வைப்பது, கிராம நலன்கருதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் முறையாக தீா்மானங்களை பதிவு செய்தல், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் நகலை பொதுமக்களின் பாா்வைக்கு வைப்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் உறுதி செய்யவேண்டும். ஆட்சியரிடம் மனுகொடுக்கும்போது, கட்சி பொறுப்பாளா் ஓம்பிரகாஷ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com