குடிநீா் கோரி சாலை மறியல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் மூன்று நாள்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் மூன்று நாள்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் தலைஞாயிற்றில் கடந்த 3 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். குடிநீா் விநியோகப் பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக சீரான குடிநீா் விநியோகத்தில் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா், பேரூராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, உறுதியளித்ததன்பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com