தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையில், தலைமை அலுவலக பொறுப்பாளா் சிலம்பரசன் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், நாகை, திருவாருா் ,தேனி, சத்தியமங்கலம், ஆத்தூா், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் 18-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஏலத்துக்கு சுமாா் 3,100 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டுவந்தனா். அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 8,509-க்கும் சராசரி ரூ. 7,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.