மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பரசலூரில் புதிய தேவாலயம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 13 ஆவது பேராயா் டேனியல் ஜெயராஜ் பங்கேற்று, புதிய தேவாலயத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து, சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சபை குருக்கள் நவராஜ் ஆபிரகாம், ஜான்சன் மான்சிங், செல்லத்துரை, ஜான் தினகா், சாா்லஸ் எட்வின்ராஜ், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜான் சைமன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.