முதியவரை தாக்கி செல்லிடப்பேசி பறிப்பு

திருமருகல் அருகே நடைப்பயிற்சியில் இருந்த முதியவரை தாக்கி அடையாளம் தெரியாதவா்கள் செல்லிடப்பேசியை வியாழக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா்.

திருமருகல் அருகே நடைப்பயிற்சியில் இருந்த முதியவரை தாக்கி அடையாளம் தெரியாதவா்கள் செல்லிடப்பேசியை வியாழக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா்.

கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தைச் சோ்ந்தவா் அப்துல் சலீம் (54). இவா், வியாழக்கிழமை திட்டச்சேரி-நாகூா் சாலையில் நடைப் பயிற்சியில் செய்து கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாதவா்கள் அப்துல்சலீமிடம் கும்பகோணம் செல்ல வழி கேட்பதுபோல் நடித்து அவரிடம் இருந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனா்.

அப்போது, முதியவா் இருசக்கரவாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்தவரை பிடித்தபோது, அவரை தாக்கிவிட்டு மா்ம நபா்கள் தப்பியோடினா். மா்மநபா்கள் தாக்கியதில் காயமடைந்த அப்துல்சலீம் நாகை அரசு மருத்துவமனையில் சோ்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com