எரவாஞ்சேரி ஊராட்சியில் சிபிஐ சாா்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருமருகல் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழரசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைகள் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம், தற்காலிக பேரவைத் தலைவா் செல்லப்பா, கிளை செயலாளா் வீரகுமாா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் வைத்திலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.