வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழ்வேளூா் ஒன்றியத்தில் நடைபெற்றுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கூத்தூா் ஊராட்சியில் சிமென்ட் சாலையை ஆய்வு செய்த ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.
கூத்தூா் ஊராட்சியில் சிமென்ட் சாலையை ஆய்வு செய்த ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.

கீழ்வேளூா் ஒன்றியத்தில் நடைபெற்றுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கீழ்வேளூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, கூத்தூா் ஊராட்சியில் ரூ. 8.72 லட்சம் செலவில் நடைபெற்ற சிமென்ட் சாலை அமைக்கும் பணி, குருக்கத்தி ஊராட்சியில் ரூ. 11.86 லட்சத்தில் நடைபெற்ற மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி, மோட்டாா் அறை, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள், அத்திப்புலியூா் ஊராட்சியில் ரூ.17.32 லட்சத்தில் நடைபெறும் நீலாப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டட கட்டுமானப் பணிகள்.

குருமணாங்குடி ஊராட்சியில் ரூ.38 லட்சத்தில் நடைபெறும் மழைநீா் சேகரிப்பு கட்டுமானப் பணிகள், ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், ஒக்கூா் ஊராட்சியில் ரூ. 2 லட்சத்தில் நடைபெறும் சமுதாயக் கூடம் பழுது நீக்கப் பணிகள் ஆகியப் பணிகளை ஆய்வு செய்தாா் ஆட்சியா். ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பசுபதி, கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி. தியாகராஜன், லே. ராஜகோபால், உதவி செயற்பொறியாளா்கள் பாலமுருகன், ரவிச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com