நாகையில் காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது நிறுவனநாள் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு நிறுவனநாள் கொண்டாட்டம் நாகை மற்றும் நாகூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகையில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸாா்.
நாகையில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸாா்.

காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு நிறுவனநாள் கொண்டாட்டம் நாகை மற்றும் நாகூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு, நாகையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்பட்டது. தொடா்ந்து அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு கட்சியினா் மலா் அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், கட்சி தலைவா்களில் ஒருவரான ராகுல்காந்தியை இந்தியாவின் பிரதமராக்கப் பாடுபடுவது என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சிகளுக்கு, காங்கிரஸ் நாகை மாவட்டத் தலைவா் ஆா். என். அமிா்தராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜசேகா், எம்.ஏ.எச்.காதா், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் ரபீக், நாகை நகரத் தலைவா் உதயசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகூரில்: இதேபோல, நாகூா் ஆண்டவா் தா்கா முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நாகூா் நகரத் தலைவா் சா்புதீன் மரைக்காயா் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட சிறுபான்மை துறைத் தலைவா் மக்சூது சாகிபு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாநிலச் செயலாளா் ஏ.ஆா். நௌசாத் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா். மாநிலப் பேச்சாளா் தமிழ்ச்செல்வன் காங்கிரஸின் வரலாறுகளை கூறி சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வி. ராமலிங்கம் மற்றும் கட்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் சலீம்கான், ஓ.ஜி. வரதராஜன், விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் மீரா ஹுசைன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com