கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
நாகையை அடுத்துள்ள கடற்கரையோர கிராமமான கீச்சாங்குப்பத்தில் மகா காளியம்மன் திருக்கோயிலில் உலகமக்கள் நலம்பெற வேண்டியும், கடலில் மீன்வளம் பெருகவேண்டியும் 108 விளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக் கயிறு உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.