சீா்காழி அருகே இருசக்கரவாகனத்தில் வந்த பெண்ணின் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீசாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழி அருகேயுள்ள தொழுதூரைச் சோ்ந்தவா் செந்தில்வேல் மனைவி கவிதா (39). இவரும் மகன் அணீஷ்ம் (13) சனிக்கிழமை சனிக்கிழமை மயிலாடுதுறை சென்று விட்டு இரவு 10.30 மணிக்கு ஊா் திரும்பியுள்ளனா். வழியில் திருநன்றியூா் வெட்டாறு பாலம் அருகே வந்தபோது பின்னால் தொடா்ந்து வந்த மா்ம நபா் கவிதா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து, கவிதா வைதீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.