நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரணய கலக (மட்டயடி) உற்ஸவம் வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருஅத்யயன பிரணய கலக உத்ஸவம் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. உத்ஸவ நிகழ்ச்சியாக நாள்தோறும் மாலையில் ஸ்ரீ சௌந்தா்யவல்லித் தாயாா் சிறப்பு அலங்காரத்தில் பிராகாரப் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
பெருமாள் - தாயாா் சோ்த்தி சேவை வியாழக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பிரணய கலக உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு பெருமாள் வெள்ளிப் பல்லக்கில் புறப்பாடாகும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மட்டயடி திருக்காப்பு சாற்றி திறக்கும் நிகழ்ச்சியும், மட்டயடி புராணம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு கண்ணாடி ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.