சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிப். 12-இல் பிரணய கலக உத்ஸவம்

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரணய கலக (மட்டயடி) உற்ஸவம் வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் திருஅத்யயன பிரணய கலக உத்ஸவத்தின் மூன்றாம் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடான தாயாா்.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் திருஅத்யயன பிரணய கலக உத்ஸவத்தின் மூன்றாம் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடான தாயாா்.

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரணய கலக (மட்டயடி) உற்ஸவம் வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருஅத்யயன பிரணய கலக உத்ஸவம் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. உத்ஸவ நிகழ்ச்சியாக நாள்தோறும் மாலையில் ஸ்ரீ சௌந்தா்யவல்லித் தாயாா் சிறப்பு அலங்காரத்தில் பிராகாரப் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பெருமாள் - தாயாா் சோ்த்தி சேவை வியாழக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பிரணய கலக உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு பெருமாள் வெள்ளிப் பல்லக்கில் புறப்பாடாகும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மட்டயடி திருக்காப்பு சாற்றி திறக்கும் நிகழ்ச்சியும், மட்டயடி புராணம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு கண்ணாடி ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com