மயக்கமடைந்த மாவட்டத் தலைவா்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மாவட்ட தலைவா் இளவரசன் தலைமையில் 9-ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். 10 பெண்கள் உள்ளிட்ட 18 பேரை போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனா். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் இளவரசனை போலீஸாா் தூக்கிச்சென்றபோது அவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து போலீஸாா் அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக்கப்பட்டது.