நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த 12 பேரை போலீஸாா் புதன்கிமை கைது செய்தனா்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் உள்ளிட்டோா் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன்படி, நாகையில் 9- ஆவது நாளாக வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், பப்ளிக் ஆபீஸ் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் அந்துவன்சேரல் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.