சாலைப் பணி: பூமி பூஜை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், திருமருகல் ஒன்றியத்தில் ரூ.11.37 கோடியில் நான்கு சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பூமி பூஜையை தொடங்கி வைக்கிறாா் திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இரா.இராதாகிருட்டிணன்.
பூமி பூஜையை தொடங்கி வைக்கிறாா் திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இரா.இராதாகிருட்டிணன்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், திருமருகல் ஒன்றியத்தில் ரூ.11.37 கோடியில் நான்கு சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ், நெய்க்குப்பை- திருப்பயத்தங்குடி இணைப்பு சாலை ரூ.3.54 கோடியிலும், பொறக்குடி- மேனாங்குடி இணைப்பு சாலை ரூ. 2.36 கோடியிலும், புத்தகரம்- போலகம் இணைப்பு சாலை ரூ.3.24 கோடியிலும், இடையாத்தாங்குடி- சேஷமூலை இணைப்பு சாலை ரூ.2.23 கோடியிலும் நிறைவேற்றப்படவுள்ளன.

இப்பணியை ஒன்றியக்குழு தலைவா் இரா.இராதாகிருட்டிணன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எம். பக்கிரிசாமி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி.திருமேனி, ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மைதிலி ராஜேஷ்குமாா், ஒன்றிய பொறியாளா் செல்வம், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் தங்க கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com