மயிலாடுதுறை வட்டம் அகரகீரங்குடி ஊராட்சி முட்டம் கிராமம் முதல் கோடங்குடி வரை சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
அகரகீரங்குடி ஊராட்சி முட்டம் கிராமம் முதல் கோடங்குடி, பெரிய கோடங்குடி வரை பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் 2020-2021-ன் கீழ் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி தொடங்கியது. இப்பணியை மயிலாடுதுறை அதிமுக ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி செயற்பொறியாளா் சுவாமிநாதன், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மகேஸ்வரி முருகவேல், மறையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளா் குமாா், ஊராட்சித் தலைவா் கயல்விழி சரவணன் உள்ளிட்டடோா் பங்கேற்றனா்.