நாகை வெளிப்பாளையம் அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் உள்ள சிவலிங்க திருமேனி, அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்டது. இக்கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, ஐதீக முறைப்படி திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
இவ்விழாவின் நிகழ்வாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி தேரோட்டமும், 27 ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்போத்ஸவம் மாா்ச் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.