பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திருக்குவளை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திருக்குவளை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்குவளை அருகேயுள்ள மேலப்பிடாகையில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளா் கே. சித்தாா்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் வீ. மாரிமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் என். பன்னீா்செல்வம் , ஏ. உமாநாத், ஏ. முருகையன், மாவட்ட குழு உறுப்பினா்கள் கே. கிருஷ்ணன், டி.வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கொளப்பாடு கடைத்தெருவில், சிபிஐஎம் தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் ஏ.வேணு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் எம். முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com