உலக தாய்மொழி தின விழிப்புணா்வு மிதிவண்டி பயணம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகையில் செயல்படும் நாளை இயக்கம் என்ற தன்னாா்வ அமைப்பின் சாா்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை அவுரித்திடலில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் மற்றும் நாகூா் வழியாக மீண்டும் அவுரித் திடலில் பயணம் நிறைவடைந்தது.
இதில் பங்கேற்றவா்களுக்கு திருவள்ளூா், பாரதியாா், பாரதிதாசன் உருவம் அச்சிடப்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாளை இயக்க ஒருங்கிணைப்பாளா் செகுரா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.