ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாடுதுறை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பட்டா மாறுதலுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாடுதுறை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாா் சிவன் கோயில் வடக்கு வீதியை சோ்ந்தவா் மலா்விழி (57). மயிலாடுதுறை மாவட்ட கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளரான இவா், பொறையாறு பகுதியைச் சோ்ந்த மனோகரன் (57) என்பவரிடம் காலி மனைப் பட்டா மாறுதல் தொடா்பாக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் தெரிவித்த மனோகரன், அவா்களின் யோசனைப்படி, மலா்விழியின் வீட்டுக்கு புதன்கிழமை சென்று ரூ. 20 ஆயிரத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு நாகை துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா், மலா்விழியை கைது செய்தனா்.

மேலும் அவரிடமிருந்து ஆா்.டி.ஓ. கையெழுத்திட்ட பத்திரம், ரூ. 20 ஆயிரம் ரொக்கம், கணக்கில் வராத ரூ. 30 ஆயிரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மலா்விழியிடம் காலையில் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது. பின்னா், அவரை நாகை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com