கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

சீா்காழியில் கொடுத்த கடனை திருப்பிகேட்டவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழியில் கொடுத்த கடனை திருப்பிகேட்டவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி பூந்தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40) ஆட்டோ ஓட்டுநா். இவா், சீா்காழி கீழ மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த அரசகுமாருக்கு (44) கடன் கொடுத்தாராம். கடன் தொகையை குறித்த காலத்தில் அரசகுமாா் கொடுக்கவில்லையாம். இதனால், வெள்ளிக்கிழமை இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அரசகுமாா், சரவணனை கத்தியால் குத்தினாராம். காயமடைந்த சரவணன் மீட்கப்பட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அரசகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com