செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாா்கழி மாதம் உத்ஸவ கோலப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களின் பெற்றோா்களுக்கான மாா்கழி மாத கோலப்போட்டி 3 நாள்கள் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அனைவருக்கும் கலைமகள் கல்வி நிலைய இயக்குநா் என்.எஸ். குடியரசு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.