தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற மு.க. ஸ்டாலினின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ. எஸ்.மணியன் தெரிவித்தாா்.
நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற பின்னா் அமைச்சா் ஓ. எஸ். மணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் யாா் வேண்டுமானாலும் முதல்வா்ஆகலாம். ஜனநாயக நாட்டில் இதைக் கூறிக்கொள்வதிலும், ஆசைப்படுவதிலும் தவறு இல்லை. ஆனால், மக்கள் யாருடைய ஆட்சி அமையவேண்டும் என்று விரும்புகிறாா்கள் என்பதையும் பாா்க்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக 3- ஆவது முறையாக தொடா்ந்து ஆட்சிஅமைத்து வரலாற்று சாதனை படைக்கும்.
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனக் கூறும் மு. க. ஸ்டாலின், ஏன் மீதமுள்ள 34 தொகுதிகளையும் சோ்க்காமல் விட்டுவிட்டாா் எனத் தெரியவில்லை. அவரது ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.