நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை வரை 8,182 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக மேலும் 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இம்மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 8,192- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 15 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7, 932 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 129 ஆக உள்ளது.