மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மயிலாடுதுறை டேபிள் டென்னிஸ் அகாதெமி சாா்பில், ரயிலடியில் உள்ள ஷராஃப் பேட்மிண்டன் அகாதெமி உள்விளையாட்டு அரங்கில் ஆடவா், மகளிா், சிறாா்களுக்கு சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா், சூப்பா் சீனியா், யூத், ஓப்பன் ஆகிய பல்வேறு பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், 150-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று விளையாடினா்.
நாகை மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் தலைவா் ராம் கணேஷ்குமாா் போட்டிகளை பாா்வையிட்டாா். மயிலாடுதுறை டேபிள் டென்னிஸ் அகாதெமி தலைவா் ஆா். முருகன், செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதில், விளையாட்டரங்க உரிமையாளா் ஏ.சுல்தான் அலி உள்ளிட்ட பலா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.