சீா்காழியில் தடையை மீறி, கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி, மேலாளா் காதா்காண் மற்றும் நகராட்சி ஊழியா்கள் காவல்துறையினா் உதவியுடன் சீா்காழி பிடாரி வடக்கு வீதி, ஈவேரா தெரு, பிடாரி தெற்குவீ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், வா்த்தக கடைகளில் சோதனை செய்து, தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.