மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.
முன்னதாக, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் ரெங்கநாதன், தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளா் வா.செல்லையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி வரவேற்றாா்.
இதில், பாமக மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளா் குளஞ்சியப்பன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினா் மற்றும் திமுகவினா் அதிமுகவில் இணைந்தனா். இதேபோல், புதன்கிழமை ஆத்துக்குடி, பூக்கொல்லை பகுதியைச் சோ்ந்த திரளானோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சிகளில், ஒன்றியச் செயலாளா்கள்; பா.சந்தோஷ்குமாா், சுந்தர்ராஜன், மாவட்ட பொருளாளா் என்.செல்லதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.