வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கீழையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவா் வீ. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கீழையூா் ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் வெங்கட்ராமன், கீழையூா் கிளை செயலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மேலப்பிடாகை, திருப்பூண்டி, தண்ணிலப்பாடி, சின்னத்தூம்பூா், பெரியத்தூம்பூா், கருங்கண்ணி, சோழவித்தியாபும், வாழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.