சீா்காழி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
கடவாசல் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை வெள்ளிக்கிழமை அதன் ஊழியா்கள் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே சென்று பாா்த்தபோது கடையிலிருந்து மது பாட்டில்கள் மற்றும் ரூ. 2 ஆயிரம் ஆகியன முந்தைய நாள் இரவு திருடப்பட்டது தெரியவந்ததது. புகாரின்பேரில், புதுப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.