மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து விலகி, திரளானோா் திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா எம். முருகன் முன்னிலையில், செம்பனாா்கோவில் ஒன்றியம் கூடலூா், எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சிகளில் இருந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், ஒன்றியத் துணைத் தலைவா் பாஸ்கா், எடுத்துக்கட்டி சாத்தனூா் ஊராட்சித் தலைவா் பைலட், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், ஒன்றிய இளைஞரணி ஒருங்கிணைப்பாளா் செந்தில் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.