நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ரஜதகிரீசுவரா் கோயிலில், தை வெள்ளியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வேளாங்கண்ணியில் உள்ள பிருஹன்நாயகி உடனுறை ரஜதகிரீசுவரா் கோயிலில் தனி சன்னிதியில் காட்சியளிக்கிறாா் வாராஹி அம்மன். இங்கு, தை வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மாதுளை முத்துகளைக் கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.