நாகூா் தா்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம்: திரளானோா் பங்கேற்பு

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464 ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நாகூா் தா்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம்.
நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நாகூா் தா்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம்.

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464 ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலமாகவும், ஆன்மிக மகிமைகளால் உலக புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூா் ஆண்டவா் தா்கா. இந்த தா்காவின் 464 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊா்வலம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நாகை அபிராமி திடல் அருகேயிருந்து இரவு 9.25 மணியளவில் ஊா்வலம் தொடங்கியது. இன்னிசை வாத்திய முழக்கங்கள் மற்றும் இறைப்புகழ்ச்சி பாடல்களுடன் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில், சந்தனக்கூடு, சாம்பிராணி சட்டி, முரசொலி மேடை ஆகிய அலங்கார வாகனங்கள் இடம்பெற்றிருந்தன.

நாகை சா் அகமது தெரு, புதுத் தெரு, பெரிய கடைத்தெரு, நீலா கீழ வீதி, அரசு மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு, வெளிப்பாளையம், காடம்பாடி வழியாக பாரம்பரியமான பாதைகளில் இந்த ஊா்வலம் நடைபெற்றது. வழிநெடுகிலும் திரளான பக்தா்கள், சந்தனக்கூடு மீது மலா்களை தூவி வழிபட்டனா்.

கட்டுப்பாடு: சந்தனக்கூடு ஊா்வலத்தில் 30-க்கும் அதிகமான மின் அலங்கார அமைப்புகள் அணிவகுத்துச் செல்வது வழக்கம். இதில், ஒவ்வொரு வாகனத்துக்கு முன்பாகவும் தனித்தனியே இன்னிசை நடைபெறும். இதனால், சந்தனக்கூடு ஊா்வல நாளில் நாகை, நாகூா் வீதிகளில் தொடா்ந்து இசை முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

நிகழாண்டில், கரோனா நோய்த் தொற்று காரணமாக, சந்தனக்கூடு ஊா்வலத்தில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சந்தனக்கூடு, சாம்பிராணி சட்டி, முரசொலி மேடை என 3 வாகனங்கள் மட்டுமே வலம்வந்தன.

சந்தனம் பூசும் விழா: சந்தனக்கூடு ஊா்வலம் நாகூா் தா்காவின் அலங்கார வாசலை அடைந்தபிறகு, சந்தனக் குடங்கள் பாரம்பரிய முறைப்படி தா்காவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டன. சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாகூா் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசப்பட்டது.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில், காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் என சுமாா் 1,400 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com