மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே தலச்சங்காட்டில் பாமக மற்றும் வன்னியா் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பாமக மாவட்டச் செயலாளா் அன்பழகன் தலைமை வகித்தாா். பாமக அமைப்பு மாநிலத் துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்ட அமைப்பு தலைவா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாநில துணைப் பொதுச் செயலாளா் பழனிசாமி கலந்து கொண்டு வன்னியா் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, ஜனவரி 29-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பாமக ஒன்றியச் செயலாளா்கள் முத்துக்குமாா், பாபு, சபரிராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.