வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்க கூட்டு இயக்கத்தினா் மயிலாடுதுறையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் ஒருங்கிணைப்பாளா் பொன்.நக்கீரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.