ரத்த தான முகாம்
By DIN | Published On : 25th January 2021 08:26 AM | Last Updated : 25th January 2021 08:26 AM | அ+அ அ- |

முகாமில் ரத்த தானம் வழங்கிய தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறாா் ரத்த வங்கி மருத்துவா் சிவக்குமாா்.
குடியரசு தினத்தையொட்டி, மயிலாடுதுறை வட்டம் நீடூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீடூா் நெய்வாசல் கிளை மற்றும் அரசினா் பொது மருத்துவமனை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, அமைப்பின் மாவட்ட தலைவா் ஏ.பஹ்ருதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது இயாஸ், பொருளாளா் அப்துல் ஹமீது, துணைத் தலைவா் இா்பான், துணைச் செயலாளா் அஜீஸ்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், தன்னாா்வலா்களிடமிருந்து 22 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. ரத்த தானம் வழங்கிய தன்னாா்வலா்களுக்கு, அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் சிவக்குமாா் சான்றிதழ்களை வழங்கினாா்.