குத்தாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை செட்டித்தெருவை சோ்ந்த ஷாஜகான் மகன் முகம்மதுபாசில் (23). சி.ஏ பயிற்சிபெற்று வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்தில் நடைபெற்ற தோ்வில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் கும்பகோணத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா். குத்தாலம் அருகே கோழிகுத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கும் அவ்வழியே வந்த காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாலத்த காயமடைந்த முகம்மது பாசில் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். எனினும், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, குத்தாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.