நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை வரை 8,399 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 14 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன்மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,414- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 4 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,211 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 71-ஆக உள்ளது.