தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஜான்சைமன் தலைமை வகித்தாா். தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் பங்கேற்று, 19 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா். இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.